Forbidden Indian Places: நம் நாட்டிலேயே நமக்கே 'நோ என்ட்ரி' என்று சொல்லப்படும் 5 இடங்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அந்த இடங்கள் எவை, ஏன் இந்த விதி அமலில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நம்ம நாடு, நம்ம நிலம்... இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் போக நமக்கு உரிமை உண்டு என நினைக்கிறோம். ஆனால், சில 'ரெட்-லைன்' பகுதிகள் உள்ளன. அங்கு இந்தியர்கள் செல்ல முழுத் தடை. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் அரசு அனுமதியுடன் ஜாலியாகச் சுற்றிப் பார்க்கிறார்கள். பாதுகாப்பு, பழங்குடியினர் நலன், பதட்டமான எல்லைகள் போன்ற காரணங்களால் இந்த 5 இடங்களிலும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
27
இந்தியர்களுக்கு நோ.. வெளிநாட்டினருக்கு எஸ்.. ஏன்?
இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, தேசிய பாதுகாப்பு. சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் என்பதால் பாதுகாப்பு அதிகம். இரண்டு, பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம். 'அந்தமான் பழங்குடியினர் பாதுகாப்பு விதிமுறைகள் 1956'-ன்படி, சில பழங்குடி மக்களுடன் வெளி உலகத்தினர் தொடர்பு கொள்ளக்கூடாது. இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு. சில தீவுகளில் எரிமலைகள், அரிய விலங்குகள் உள்ளன. வெளிநாட்டினர் RAP (Restricted Area Permit) அல்லது PAP (Protected Area Permit) மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தியப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
37
1. வடக்கு சென்டினல் தீவு, அந்தமான்
இங்குதான் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சென்டினலீஸ் பழங்குடியினர் வாழ்கின்றனர். வெளியாட்கள் யாரைக் கண்டாலும் அம்புகளை எய்து தாக்குவார்கள். 2018-ல் ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க மிஷனரி இங்கு செல்ல முயன்று கொல்லப்பட்டார். இதனால், இந்தத் தீவைச் சுற்றி 5 கடல் மைல் தூரத்திற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு ஆய்வாளர்கள்கூட ட்ரோன்கள் மூலம் தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க முடியும். இந்தியர்களுக்கு இது முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி.
இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை இங்குதான் உள்ளது. விஞ்ஞானிகளும், வெளிநாட்டு ஆய்வாளர்களும் சிறப்பு அனுமதி பெற்று இங்கு தரையிறங்கலாம். ஆனால், இந்தியப் பயணிகள் இந்தத் தீவில் கால் பதிக்கத் தடை. படகு மூலம் தூரத்தில் இருந்து மட்டுமே இந்த எரிமலையைப் பார்க்க முடியும். ஏனெனில், ஒரு தவறு நடந்தாலும் எரிமலைக் குழம்பு மற்றும் விஷ வாயுக்களால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
57
3. சாங் தாங் வனவிலங்கு சரணாலயம், லடாக்
லடாக்கின் இந்தப் பகுதியில், திபெத்திய காட்டுக்கழுதை (கியாங்) மற்றும் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. இது சீன எல்லையை ஒட்டி இருப்பதால், 'இன்னர் லைன் பெர்மிட்' பகுதியாக உள்ளது. வெளிநாட்டினர் அரசு வழிகாட்டிகள் மற்றும் ILP அனுமதியுடன் குறிப்பிட்ட பாதைகளில் செல்லலாம். ஆனால், இந்தியர்கள் இதன் மையப் பகுதிக்குள் (core zone) செல்ல அனுமதி இல்லை. நமக்கு பஃபர் சோன் (buffer zone) வரை மட்டுமே அனுமதி உண்டு.
67
4. குருதோங்மர் ஏரி ராணுவப் பகுதி, சிக்கிம்
சிக்கிமின் புகழ்பெற்ற குருதோங்மர் ஏரி வரை இந்தியர்கள் செல்லலாம். ஆனால், ஏரியின் கரையை ஒட்டி, சீன எல்லையை நோக்கியுள்ள சில மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளன. இந்தப் பகுதிக்குள் இந்தியர்கள் கேமரா, மொபைல் போன்களுடன் செல்வது முற்றிலும் தடை. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் PAP அனுமதி பெற்று, வழிகாட்டியுடன் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை செல்லலாம். எல்லைப் பாதுகாப்பு கருதி, அங்கு புகைப்படம் எடுப்பது ஆபத்தானது என்பதால் இந்தியர்களுக்கு இந்த கட்டுப்பாடு உள்ளது.
77
5. ஜராவா ரிசர்வ் காடு, அந்தமான்
அந்தமானின் மற்றொரு பழங்குடியினரான ஜராவா மக்களுக்காக 1028 சதுர கிலோமீட்டர் காடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தமான் டிரங்க் சாலையில் இருந்து இந்தக் காட்டுக்குள் இந்தியர்கள் நுழைவது சட்டப்படி குற்றம். வெளிநாட்டு டாக்குமென்டரி குழுக்கள் அரசு அனுமதி பெற்று தூரத்தில் இருந்து படம்பிடிக்கலாம். ஆனால், சாதாரண இந்தியக் குடிமக்கள் இங்கு பிடிபட்டால், சிறைத் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும். இந்த இடங்களுக்கு நேரடியாகச் செல்ல தடை இருந்தாலும், நார்த் சென்டினல் தீவை 5 கடல் மைல் தூரத்தில் இருந்தும், பேரென் தீவை தூரத்தில் இருந்தும் படகு மூலம் பார்க்கலாம். சாங் தாங் பஃபர் சோனில் கேம்பிங் செய்யலாம்.