₹1 கோடி போயே போச்சு: டிஜிட்டல் கைதில் பணத்தை இழந்த முதியவர்!

Published : Jul 02, 2025, 09:42 PM IST

உ.பி.யில் 60 வயது முதியவர் போலி நீதிமன்ற விசாரணைகள் மூலம் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ₹1 கோடி இழந்தார். மோசடி செய்பவர்கள் அதிகாரிகளைப் போல நடித்தனர், 7 பேர் கைது. எச்சரிக்கையாக இருங்கள்!

PREV
16
'டிஜிட்டல் கைது' என்றால் என்ன? புதிய மோசடி முறை!

உத்தரப் பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் 'டிஜிட்டல் கைது' மோசடிக்கு ஆளாகி ₹1.04 கோடியை இழந்துள்ளார். மோசடி கும்பல் அரசு அதிகாரிகளைப் போல நடித்து, போலியான மெய்நிகர் நீதிமன்ற விசாரணைகளை நடத்தி இவரை ஏமாற்றியுள்ளது. 'டிஜிட்டல் கைது' என்பது சைபர் மோசடிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதில் பாதிக்கப்பட்டவர்கள் டிஜிட்டல் முறைகள் மூலம் கண்காணிப்பில் அல்லது சட்டக் காவலில் இருப்பதாகப் பொய்யாகக் கூறப்படுவார்கள். அதிகாரிகளாகப் பாசாங்கு செய்யும் மோசடி கும்பல், தொடர்ந்து வீடியோ அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ஏமாற்றுவார்கள். இது பெரும்பாலும் பணம் பறிப்பு அல்லது மோசடிக்கு வழிவகுக்கிறது.

26
மோசடி கும்பலின் வினோதமான அணுகுமுறை

ஷாஹ்ஜஹான்பூரைச் சேர்ந்த 60 வயதான சரத் சந்த் என்பவரை, ₹2.8 கோடி சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக தான் விசாரணையில் இருப்பதாக மோசடி கும்பல் நம்ப வைத்துள்ளது. மே 6 ஆம் தேதி தொலைபேசி மூலம் இவரைத் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், ஒரு நீதிபதியாகப் பாசாங்கு செய்து, வாட்ஸ்அப் மூலம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக போலியான மெய்நிகர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

36
மெய்நிகர் விசாரணை

ஷாஹ்ஜஹான்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதி பிடிஐயிடம் கூறுகையில், இந்த "மெய்நிகர் விசாரணைகளின்" போது, போலியான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் சரத் சந்தை மிரட்டி, இறுதியாக ஒன்பது போலி "வழக்கறிஞர்களின்" 40 வங்கிக் கணக்குகளுக்கு ₹1.04 கோடியை மாற்றும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர், "டிஜிட்டல் கைது" நடந்த நேரத்தில் யாருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

46
மோசடி கும்பல் கைது; தொடரும் விசாரணை

விசாரணையின் போது, இந்த வழக்கோடு தொடர்புடைய ஒரு வங்கிக் கணக்கில் ₹9 கோடி ரூபாய் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் காவல்துறை கண்டுபிடித்தது. அந்த கணக்கும் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக திவேதி தெரிவித்தார்.

56
கைது

இந்த வழக்கில் சச்சின், பிரசாந்த், கௌதம் சிங், சந்தீப் குமார், சையத் சைப், ஆர்யன் ஷர்மா மற்றும் பவன் யாதவ் என அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 318 (மோசடி), 319 (ஆள்மாறாட்டம் செய்து மோசடி), 204 (அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66(c) மற்றும் 66(d) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

66
உஷாராக இருங்கள்: காவல்துறை எச்சரிக்கை

உத்தரப் பிரதேச காவல்துறை 'டிஜிட்டல் கைது' போன்ற சைபர் மோசடிகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது 1530 என்ற பிரத்யேக உதவி எண் மூலமாகவோ புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருப்பது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories