உணர்வுகளை தடுக்க முடியாது
திருமணமாகிவிட்டது, காதலி இருக்கிறாள் என்பதற்காக ஒரு எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரை பிடித்துவிட்டால், அதை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் சார்ந்த நமக்குள் இருக்கும் உணர்வுகளை தடுக்கவும் முடியாது. ஆனால் கட்டுப்பாடாக இருக்கலாம். ஒருவேளை அவருடன் தான் சேர்ந்து பணி செய்ய வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், விளையாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே ஒருவரை நமக்கு பிடிக்கும் போது, இயல்பாகவே அவர் மீதான நெருக்கம் உருவாகிவிடுகிறது. அதை நாம் கனிவாக பேசுவதி, இனிமையாக நடந்துகொள்வது, அவருக்கு மட்டும் சிறப்பு கவனத்தை ஒதுக்குவது போன்ற செயல்களை வெளிப்படுத்தும். இதை பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்தால், அதை ஒருவித ‘ஜொள்ளு’ என்பார்கள்.