இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஒன்றியத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸை ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய். அந்த ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் சைலண்டாக செய்துள்ள இந்த உதவி குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நிக்சன் எலிமினேட் ஆனதுல அவ்வளவு சந்தோஷமா... ஐஷுவின் தந்தை போட்ட வேறலெவல் பதிவை வைரலாக்கும் நெட்டிசன்கள்