சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி..!

Published : Jan 20, 2024, 03:10 PM IST

3 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். 

PREV
13
சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி..!
Narendra Modi

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் புறப்பட்டு நேற்று இரவு அங்கு தங்கினர். 

23
Kamba Ramayanam

அப்போது பிரதமர் மோடி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் 'கம்பராமாயணம்' ஐந்து தொகுப்புகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். ஸ்ரீ ராமரின் எழுச்சியூட்டும் கதையை நாட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் ஒருவரால் காண முடியும் என தெரிவித்திருந்தார். 

33
Raj Bhavan

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டார். அதற்கு தண்ணீரும் ஊற்றினார். அப்போது அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர். இதனையடுத்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories