Idhayam Tamil Serial
லதா மற்றும் பாரதி என இருவரும் ஆதி எழுதிய கவிதைகள் முழுவதையும் படித்து முடித்து விட, அதில் யார் அந்த பெண் என்ற விஷயம் தெரிய வராததால் ஆதியின் போனை பார்த்தால் உண்மை தெரிய வரும் என முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு ஆதியின் போனை எடுக்க அடிக்கடி ரூமுக்குள் சென்று வர ஆதி தொடர்ந்து போன் பேசி கொண்டே இருக்கிறான்.
Idhayam Today Update
இவர்களின் நடத்தையில் ஆதிக்கும் சந்தேகம் வருகிறது, ஆனால் அவன் அதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு மீட்டிங் என்று ஆதியை அழைத்து செல்ல அவன் போன் ரூமில் இருப்பதை பார்த்து லதாவும் பாரதியும் உள்ளே வருகின்றனர். ஆதியின் போனை எடுக்க அதில் பாஸ்வோர்ட் போடப்பட்டு இருப்பதால் போனை அன்லாக் செய்ய முடியாமல் போகிறது.