மேற்கு திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.