Guru Peyarchi Palan: ஆடி முடிந்து ஆவணி வந்தால் இவர்களுக்கு டும் டும்: குருவால் பலனடையும் ராசிக்காரர்கள் யார்?

Published : Jul 10, 2024, 12:38 PM IST

குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளை பார்க்கிறார். குருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து எந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் வந்துள்ளது. ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் யாரெல்லாம் திருமண பந்தத்தில் நுழையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

PREV
16
Guru Peyarchi Palan: ஆடி முடிந்து ஆவணி வந்தால் இவர்களுக்கு டும் டும்: குருவால் பலனடையும் ராசிக்காரர்கள் யார்?
மேஷம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் நிறையப்போகிறது.

26
கடகம்

லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். குருவின் பார்வையானது உங்களுடைய தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் நல்ல செய்தி தேடி வரும்.

36
கன்னி

ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும்   பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில்  நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது

46
விருச்சிகம்

ஏழாம் வீட்டில் பயணம் செய்யும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.  பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும்.

56
மகரம்

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை ஆண்டு முழுவதும் உங்க ராசியின் மீது விழுகிறது.  பணவருமானம் தேடி வரும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்

66
குருவின் அருள்

குரு பலன் ஒருவருக்கு கிடைத்தால் திருமணம் சுப காரியம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். எனவேதான் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கப்போனால் குரு பலன் வந்து விட்டதா என்று முதலில் ஜோதிடர்கள் பார்ப்பார்கள். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலன் அடையப்போகும் ராசிக்காரர்கள் வியாழக்கிழமை குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்க பலன்கள் அதிகரிக்கும். தடையின்றி சுப காரியம் நடைபெறும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories