விஜய்யின் இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்படைய வைத்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தன்னுடைய தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட விஜய், அரசியலில் முழு நேரம் ஈடுபடப் போவதாகவும், எனவே தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'கோட்' மற்றும் அடுத்ததாக நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தை நடித்து முடித்துவிட்டு, முழுமையாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.