அப்போது, அங்கு இருந்த முட்புதரில் நித்யா அரை நிர்வாண கோலத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து விவேகானந்தன் அதிர்ச்சியில் கதறி அழுததார். மேலும், அவரது உடலில் ரத்த காயங்கள் மற்றும் அவர் அணிந்த செயின் மற்றும் கம்மல்களும் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நித்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.