பின்னர் மகள் கீதா தாய் சின்னகாளியின் கையை பிடித்து கொண்டதை அடுத்து மருமகன் மாமியாரின் தலையில் கல்லை கொண்டு தாக்கியதில் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து சின்னகாளியின் கள்ளக்காதலன் கொலை செய்தது போல அவர் அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போட்டுவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் கீதாவையும், ஆண்கள் மத்திய சிறையில் சிதம்பரத்தையும் அடைத்தனர்.