இந்நிலையில், காதலன் பார்த்திபனை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். இதற்கு சவுந்தர்யாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். கத்தி முனையில் பார்த்திபனை கடத்தி கோவிலில் வைத்து சவுந்தர்யாவுக்கு காட்டாய தாலி கட்ட வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காதலி சவுந்தர்யா மற்றும் அவரது தாய் உமா, தாய்மாமன் ரமேஷ், சித்தப்பா சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.