திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் டேனி வளனரசு(19). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்களான ஆரணியை சேர்ந்த கிஷோர்கண்ணன்(19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி(19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா(18) ஆகியோர் வேலூர் சாய்நாதபுரத்தில் வீடு வாடகை எடுத்து கல்லூரியில் படித்து வந்தனர்.