Crime News Today: 70 வயது அத்தையை கதற கதற பலாத்காரம் செய்த மருமகன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

First Published Jun 12, 2023, 3:18 PM IST

70 வயது அத்தையை கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (30). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது அத்தையான 70 வயது மூதாட்டி அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் வீடு காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஜெய்ஹிந்துபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், மூதாட்டியின் மருமகன் அர்ஜுனன் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது  கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அர்ஜுனன், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மூதாட்டி மயங்கியதால் அர்ஜுனன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜுனன் கைது செய்யப்பட்டுள்ளார். 

click me!