Karthigai Deepam: கைது செய்யப்படும் கார்த்திக்; சாமுண்டீஸ்வரி முடிவால் அதிர்ச்சியில் ரேவதி! கார்த்திகை தீபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' தொடரில் நேற்றைய தினம் மகேஷ் காணாமல் போனதால், போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று போலீசார் கார்த்திக்கை கைது செய்கிறார்கள். இதை தொடர்ந்து என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 

Zee tamil Karthigai Deepam serial march 25th Episode update mma

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில், ஜயர் மணமகன் மகேஷை மணமேடைக்கு வர சொல்ல, அவன் காணாமல் போன விஷயம் மாயாவுக்கு தெரிய வருகிறது. மாயா போலீசுக்கு தகவல் கொடுக்க சொன்ன நிலையில்,  போலீசார் திருமண மண்டபத்துக்கு வருகிறார்கள்.

Zee tamil Karthigai Deepam serial march 25th Episode update mma
கைது செய்யப்படும் கார்த்திக்

மணமகள் ரேவதி, ட்ரைவர் தான் இந்த கடத்தலுக்கு காரணம் என நினைப்பதாக சந்தேகத்தை கூற, சாமுண்டீஸ்வரியும் எனக்கும் ராஜா மேல் தான் சந்தேகம் இருப்பதாக சொல்கிறாள். இதன் பின்னர் போலீஸ் கார்த்திக்கை கைது செய்து, அழைத்து செல்லும் நிலையில் பாட்டி, ராஜா ராஜன், மயில்வாகனம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.

Karthigai Deepam: கார்த்திக் மீது விழுந்த பழி; பிளேட்டை மாற்றிய சாமுண்டேஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!


ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் கேட்ட வார்த்தை:

கார்த்திக்கின் அண்ணன் அருண், லாயருக்கு போன் செய்து கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்கிறார். ராஜ ராஜன்... சாமுண்டீஸ்வரியிடம் சென்று, ட்ரைவர் தான் நம்ப வீட்டு மாப்பிள்ளை என சொல்லிவிட்டு , இப்போ நீயே அவனை போலீசார் கைது செய்யும் படி செய்துவிட்டாய் என்பது போல் கேட்க, ராஜாவுக்கு  நான் சப்போர்ட் பண்றது தெரிந்தால் ரேவதிக்கு சந்தேகம் வரும். அதனால் தான் அப்படி சொன்னதாகவும் ராஜாவை வெளியே எடுக்க லாயர்களை அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறாள். 

டி.ஐ.ஜி-க்கு தகவல்:

மேலும் டி.ஐ.ஜி-க்கு தகவல் தெரிந்து, அவர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து கார்த்திக் மீது தவறு இல்லை அவரை விடுவிக்குமாறு கூறுகிறார். பின்னர் போலீசார் கார்த்திக்கை திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்து விட்டது மட்டும் இன்றி, நாங்கள் அவரிடம் செய்த விசாரணையில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்ததாக கூறுகின்றனர்.

Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி - என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு:

பின்னர் சாமுண்டீஸ்வரி மகேஷ் எங்க போனான் என்று தெரியவில்லை. ராஜா மேலயும் இப்போ எந்த தப்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. அதனால் இந்த திருமணம் தடைபடாமல் இருக்க ட்ரைவர் ராஜாவுக்கே ரேவதியை திருமணம் செய்து விடலாம் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரின் இந்த முடிவை சற்றும் எதிர்பாராத ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.

ரேவதி திருமணத்திற்கு சம்மதிப்பாரா:

அதெல்லாம் முடியாது என மறுக்கும் நிலையில், சாமுண்டீஸ்வரி எப்படி ரேவதியின் மனதை மாற்றி மகளை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் தொடரை பாருங்கள்.

Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

Latest Videos

vuukle one pixel image
click me!