சண்டை, சச்சரவு என பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி செம்ம ரகளையாகபோய்க்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.
undefined
இந்நிலையில் நேற்று வைல்ட் கார்டு மூலமாக 17வது போட்டியாளராக வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் விஜே அர்ச்சனா. வீட்டிற்குள் அர்ச்சனா காலடி எடுத்து வைக்கும் போதே “தீமை தான் வெல்லும்” பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
undefined
அர்ச்சனா ஏற்கனவே வீட்டில் 10 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தான் உள்ளே வந்திருக்கிறார் என்பதால் வந்ததுமே அவருடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
undefined
முதல் ஆளாக அர்ச்சனா கலாய்த்தது சுரேஷ் சக்கரவர்த்தியைத் தான். கடந்த வாரம் அவர் சோபாவில் படுத்திருந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலானதை சுட்டிக்காட்டி செம்மையாக கலாய்த்தார். இதனால் சுரேஷ் கடுப்பானாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
undefined
வீட்டிற்குள் வந்த சிறிது நேரத்திலேயே அர்ச்சனாவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதன் படி அர்ச்சனா மக்கள் பிரதிநிதியாக போட்டியாளர்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக அவருடைய கழுத்தில் அட்டைகளை மாட்டிவிட்டார்.
undefined
அதில் ஷிவானிக்கு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை கொடுத்தார் அர்ச்சனா. அதை கழுத்தில் போடாமல் கையில் வாங்கிக்கொண்ட ஷிவானி அமைதியாக போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.
undefined
சக போட்டியாளர்கள் அந்த அட்டையை கழுத்தில் மாட்டியிருக்க ஷிவானி கையில் வைத்துக்கொண்டு ஹாயாக இருந்தார். இதைப்பார்த்த பிக்பாஸ் திடீரென ஷிவானி உங்க அட்டையை எடுத்து கழுத்துல மாட்டுங்க என கண்டிப்பான ஸ்கூல் பிரின்சிபல் போல உத்தரவிட்டார்.
undefined
அதன் பின்னர் சமத்து பெண்ணாக ஷிவானியும் அந்த அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டார்.
undefined