இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் 2 வயல் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ள நிலையில், இன்னும் போட்டியாளர்கள் சிலர் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் ஒரே வாரத்தில் இருவரை பிக்பாஸ் வெளியேற்றும் சூழலும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
undefined
தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை யாரிடமும் சண்டை வாங்காமலும், அதிர்ந்து கூட பேசாமலும் உள்ளவர் யார் என்று பார்த்தல் அது ஷிவானி தான்.
undefined
ஆரம்பத்தில் இவரை தான் பலர் டார்கெட் செய்து அழ வைத்தனர். தற்போது அவரை தவிர மற்றவர்கள் எல்லோருமே பிக்பாஸ் வீட்டில் டார்கெட் செய்யப்படுவதாக உணர்வதாக கூறி வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் என்ன நாடாகும் என்கிற எதிர்பார்ப்பில் செல்கிறது பிக்பாஸ்.
undefined
இந்நிலையில் ஷிவானி நடித்த பகல் நிலவு, மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நாயகனாக நடித்த அசீம் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது அனைவரையுமே குழப்பி விடுவது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் "100 சிங்கங்களை 1 நாய் வழிநடத்தினால் சிறுபடை வந்தாலும் அச்சிங்கங்கள் அனைத்தும் நாயாகிவிடும் , இதே 100 நாய்களை 1 சிங்கம் வழிநடத்தினால் பெரும்படையே வந்தாலும் அந்நாய்கள் அனைத்தும் சிங்கங்களாய் உருவெடுக்கும்" என்று கூறியுள்ளார்.
undefined
இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதை அசீம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். உண்மையில் என்ன நடக்க போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined