பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா விஜய் டிவி தொகுப்பாளர்..?

First Published Nov 5, 2020, 8:08 PM IST

இந்த முறையும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அம்மா - பிள்ளை, அக்கா - தம்பி, தாத்தா - பேத்தி என சகல விதமான சென்டிமேண்டுடன் சண்டை, கோபம், அழுகை என பலவகையான உணர்வுகள் காட்டப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டாயம் 16 போட்டியாளர்கள் இருந்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. அதனால் தான் அடுத்தடுத்து ஆட்கள் வெளியே போனாலும் புது வரவுகள் வந்த வண்ணம் உள்ளனர்.
undefined
முதல் போட்டியாளராக நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு பிறகு விஜே அர்ச்சனா வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். வந்த முதல்நாளே ஆளுக்கு ஒரு பட்டத்தை கொடுத்து ஆட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
undefined
கடந்த வாரம் இரண்டாவது போட்டியாளராக வேல்முருகன் வெளியேற, அவருக்கு பதிலாக பாடகி சுசித்ரா களமிறங்கியுள்ளார். அவரும் வந்த முதல் நாளே ஆளாளுக்கு இமேஜிக்கை கொடுத்து, சுரேஷை சூடாக்கி அர்ச்சனாவை காண்டாக்கி ஆட்டத்தை பற்றி எரிய வைத்திருக்கிறார்.
undefined
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆரி மற்றும் அர்ச்சனாவின் பெயர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த முறையும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
undefined
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட முகம்மது அசீம் தான் அந்த பிரபலம் எனக்கூறப்படுகிறது.
undefined
இதை தொடர்ந்து, பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் பாவனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக மற்றொரு தகவலும் காட்டு தீ போல் பரவியது.
undefined
எனவே இதுகுறித்து பாவனைவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அவர் தற்போது ஐபிஎல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் பிசியாக உள்ளதால் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
undefined
click me!