'மாநாடு', 'மன்மத லீலை' படங்களின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து அடுத்த படத்தைத் தயாரிக்கிறார். கடைசியாக பங்கர்ராஜூ படத்தை தொடர்ந்து நாக சைதன்யா தனது 22வது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படம் நாக சைதன்யாவின் முதல் தமிழ்ப் படம் மற்றும் வெங்கட் பிரபுவின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, வெங்கட் பிரபு ட்விட்டரில் நாக சைதன்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தை அறிவித்தார்.