அனைவரும் எதிர்பார்த்தது போல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருநங்கை நமீதா!! இது தான் காரணமாம்..!!

First Published Oct 3, 2021, 7:58 PM IST

பிக்பாஸ் (biggboss) முதல் நான்கு சீசனில் நடக்காத மாற்றம் இந்த முறை நடந்துள்ளது. முதல் முறையாக ஒரு திருநங்கை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன் வரை மூத்த நடிகர்கள், மாடலிங் துறையையே சேர்ந்தவர்கள், காமெடி நடிகர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகள், நாட்டுப்புற இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம் ஆனால் முதல் முறையாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே இந்த முறை, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்... பிரபல நடிகை ஷகிலாவின் மகள், திருநங்கையான மிளா கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர் கலந்து கொள்ளாதது சிறு ஏமாற்றம் என்றாலும்... அவருக்கு பதிலாக மற்றொரு திருநங்கை கலந்து கொண்டுள்ளார். திருநங்கையாக இருந்தாலும், மாடலிங் துறையில் பட்டையை கிளப்பி வரும் நமீதா மாரிமுத்து  தான் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளது குறித்து கூறுகையில், தன்னை போன்ற திருநங்கைகளை, சில பெற்றோர் ஒதுக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. அப்படி செய்யாமல் பெற்றோர் அவர்களை அரவணைத்தால் என்னென்ன மாற்றம் அவர்களுக்குள் வரும், அவர்கள் இந்த சமூதாயத்தில் நல்ல இடத்தை பிடிக்க உறுதுணையாக இருக்கும். என அவர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முடித்த வரை, திருநங்கைகள் குறித்த மற்றவர்கள் பார்வையை மாற்றும் விதமாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நல்ல எண்ணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள இவரை கமல்ஹாசனும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவர் சென்ற நோக்கத்தை சிறப்பாக செய்ய நெட்டிசன்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!