நாளை தியேட்டர்கள் திறப்பு... எந்தெந்த படங்களை திரையிட போறாங்க தெரியுமா?

First Published Nov 9, 2020, 8:06 PM IST

இதனால் நாளை தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தனித்தனியே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் முதலே திறக்கப்படாமல் இருந்த தியேட்டர்களை நாளை முதல் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
undefined
கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த தியேட்டர்களை திறக்க உள்ளதால், கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளிக்கான பணிகள் ஜோராக நடந்து வருகின்றன.
undefined
இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே வெடித்த விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை.
undefined
இதனால் நாளை தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தனித்தனியே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
undefined
இதனால் கொரோனாவிற்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ஹரிஷ் கல்யாணின் ‘தாராள பிரபு’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய படங்களை மீண்டும் திரையிட உள்ளார்களாம்.
undefined
அதுமட்டுமின்றி தல, தளபதி ரசிகர்களை குஷியாக்குவதற்காக வசூலில் சக்கைப் போடு போட்ட விஜய்யின் ‘பிகில்’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
click me!