அய்யோ ஆண்டவா!!... ஒரே நாளில் இத்தனை துக்கமான செய்திகளா?... அதிரும் பாலிவுட்...!

First Published Jul 12, 2020, 7:28 PM IST

நேற்று முதலே பாலிவுட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சியான மற்றும் சோகமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 
 

பாலிவுட்டின் பிரபல நடிகையான ரேகாவின் பங்களாவில் வசித்து வரும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரேகாவீன் பங்களாவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
undefined
பாலிவுட்டின் "Big B" என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
undefined
குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருக்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.
undefined
ஆனால் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை.
undefined
ஐஸ்வர்யா ராயுடன் சராப்ஜித் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரஞ்சன் ஷேகல் என்ற நடிகர் 36 வயதிலேயே உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்தார்.
undefined
பாலிவுட்டில் பிரபல நடிகரான அனுபம் கேரின் தாயாருக்கும், சகோதரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
undefined
இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த செய்திகளால் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
undefined
click me!