“எவன் சொல்லுறதையும் கேட்காதீங்க”... இசை வெளியீட்டு விழாவில் ஹேட்டர்களை வெளுத்துவிட்ட சிம்பு...!

First Published Jan 2, 2021, 8:34 PM IST

இவனுங்க எல்லாம் இந்த சோசியல் மீடியாவில் உட்கார்ந்துக்கிட்டு அவன் சொல்லுறான், இவன் சொல்லுறான்னு பேசுறத கேட்காதீங்க. 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
undefined
இதில் பட்டு, வேட்டி சட்டையில் சும்மா கெத்தாக வந்து அசத்தினார். வழக்கமான சிம்புவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தவர், மேடையில் ஏறி பேச ஆரம்பித்தது சும்மா சரவெடியாக ஹேட்டர்ஸை வெளுத்து வாங்க ஆரம்பித்தார்.
undefined
முதலில் கொரோனா காலத்தில் எப்படி ஈஸ்வரன் படத்திற்கு கதை கேட்டேன் எனக்கூறினார். Zoom காலில் தான் சுசீந்திரனிடம் கதை கேட்டேன். அது எனக்கு ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. கொரோனாவால் எல்லாரும் கஷ்டப்படும் இந்த சமயத்தில் ஒரு பாசிட்டிவிட்டி தேவை என முடிவு செய்தேன்.
undefined
எப்ப எதைப் பார்த்தாலும் திட்டுறது, எங்க பார்த்தாலும் நெகட்டிவ் எனர்ஜி... எவன் எதை செஞ்சாலும் எவனோ உட்கார்ந்துக்கிட்டு குறை சொல்லிக்கிட்டு இருக்கான்.
undefined
முதலில் இந்த அட்வைஸ் பண்றத நிறுத்தனும். அவங்க அவங்களுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. எல்லாரும் எதையாவது நோக்கி போய்கிட்டு இருப்போம். சுத்தியிருக்கிறவன் கிட்ட அட்வைஸ் கேட்குறத நிறுத்துங்க. இவனுங்க எல்லாம் இந்த சோசியல் மீடியாவில் உட்கார்ந்துக்கிட்டு அவன் சொல்லுறான், இவன் சொல்லுறான்னு பேசுறத கேட்காதீங்க. முதலில் உள்ள சுத்தம் பண்ணுங்க... அப்படி பண்ணால் வெளிய நல்லதா நடக்கும். இதை நான் ஒரு நண்பனா சொல்லுறேன்.
undefined
ஏன் சொல்லுறேன்னா நானும் ஒருகாலத்தில் மனசால ரொம்ப அடி வாங்கியிருந்தேன். அதனால் தான் எனக்கு வெயிட் போட்டுச்சி... அதனால் தான் என்னால ஷூட்டிங்கு சரியா போக முடியல. அப்புறம் தான் தேட ஆரம்பிச்சேன் மனச நிம்மதியா வச்சிக்க ஆரம்பிச்சேன் என சிம்பு பேச கைத்தட்டலும், ஆராவாரமும் அரங்கத்தையே அதிர்ந்தது.
undefined
click me!