“செம்பருத்தி” சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு... கார்த்தியின் முதல் சோசியல் மீடியா பதிவு...!

First Published Jan 7, 2021, 6:36 PM IST

மீண்டும் கார்த்திக்கையே நடிக்க வைக்கும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
undefined
நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார்.
undefined
ஆதி - பார்வதி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 800க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில், அதன் ஹீரோ கார்த்திக் சீரியலில் இருந்து விலகினார்.
undefined
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார். அவரது பயணத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என குறிப்பிட்டிருந்தது.
undefined
தற்போது கார்த்திக் நடித்து வந்த ஆதி கதாபாத்திரத்தில் தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்திரம் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. மீண்டும் கார்த்திக்கையே நடிக்க வைக்கும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில் தான் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிங் என எழுதப்பட்ட டி-ஷர்ட் உடன் ஸ்டைலிஷாக கொடுத்திருக்கும் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அத்துடன் ஒரு சூரியன், ஒரு நிலவு, ஒரு உண்மை என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!