கால் சென்டர் டாஸ்க்கில் முகத்திரையை கிழித்த அனிதா..! வாயை விட்டு சிக்கிய ரியோ..!

First Published Dec 2, 2020, 11:16 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் கால் சென்டர் ஊழியர்களாக இருந்த, போட்டியாளர்கள் இந்த வாரம் ஹவுஸ் மேட்சாக இருந்து தங்கள் மனதில் உள்ள கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.
 

அந்த வகையில் நேற்று அர்ச்சனா-ஆஜித், சோம்-கேப்ரில்லா மற்றும் ஆரி-பலஜி ஆகியோர்களின் உரையாடல்கள் இடம்பெற்றது.
undefined
இதை தொடர்ந்து இன்னும் தொடரும் இந்த டாஸ்க் குறித்த புரோமோதான் வெளியாகியுள்ளது. தற்போது அனிதா மற்றும் ரியோ உரையாடல் நடைபெற்று வருகிறது.
undefined
இதில் ’நீங்கள் தனித்தன்மையுடன் விளையாடுகிறீர்களா? என அனிதா கேட்க அதற்கு ’ஆமாம் நான் தனித்தன்மையுடன் விளையாடுகிறேன்’ என்று ரியோ கூற ’பார்ப்பதற்கு அப்படியே எனக்கு தெரியவில்லை’ என்று அனிதா பதிலடி கொடுக்கிறார்.
undefined
மேலும் ’வெளியே நீங்கள் போடாத ஒரு முகமூடியை இங்கே போட்டுக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றும் பாதி ரியோவைதான் காட்டுவேன் எனக்கு சாம்பியன் பட்டம் கொடுங்கள் என்று கூறினால் மக்கள் எப்படி கொடுப்பார்கள்? என்று ரியோவிடம் கிடுக்கிப்பிடி கேள்வியை அனிதா முன்வைத்தார்.
undefined
ஒருவர் உங்களை பற்றி கேள்வி கேட்க முன் வந்தால் உடனே அவர்களை உட்கார வைத்து விடுவீர்கள் என்று தனது குற்றச்சாட்டை அனிதா அடுக்குகிறார். அந்த குற்றச்சாட்டை நான் மறுக்கின்றேன்’ என்று ரியோ கூறுகின்றார். அதன்பின் ’நான் கேட்கிற கேள்விகளை புரிந்து கொண்டு அதன் பின்னர் நீங்கள் பதில் சொல்லுங்கள்’ என்று அனிதா ரியோவை ஆப் செய்கிறார்.
undefined
இவை அனைத்திற்கும் புன்னகையுடன் பதில் கூறிய ரியோ அனிதாவையும் பாராட்டிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
undefined
பின்னர் வெளியே வந்த ரியோ, ‘டாஸ்க் என்பதால் நான் என்னை மிகவும் கண்ட்ரோல் செய்துகொண்டேன்’ என்று தனது அணியினர்களிடம் புலம்புகிறார். இதில் இருந்து ரியோவின் முகத்திரை கிழிந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது.
undefined
click me!