கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவான நயன்தாரா! தீயாய் பரவும் கதையை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!

First Published Aug 3, 2020, 4:12 PM IST

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவான நயன்தாரா! தீயாய் பரவும் கதையை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

''தர்பார்'' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''.
undefined
இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
undefined
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்பட்டது.
undefined
ஆனால் தற்போது புதிய கதை ஒன்று உலா வருகிறது. அதில் ரஜினியை திருமணம் செய்து கொள்ள, மீனா - குஷ்பு இருவரும் போட்டி போட்டு வருகிறார்கள், இவர்களின் போட்டியை கண்ட ரஜினி இருவர் மனதையும் காயப்படுத்த வேண்டாம் என்று, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறார்.
undefined
இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை தான் கீர்த்தி சுரேஷ். இவர் திருமண வயதை எட்டிய பின், மீண்டும் இவர்கள் தங்கள் வீட்டுக்கு கீர்த்தி மருமகளாக வர வேண்டும் என்கிற ஆசையில் மோதுகிறார்கள். இதனால் வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி தான் இந்த கதை நகர உள்ளதாம்.
undefined
எனினும் இந்த படத்தில், கீர்த்திக்கு அம்மாவாக நயன்தாரா நடிக்கிறார் என்பதை தான் நயன் ரசிகர்களால் வார்த்தையால் கூட ஏற்று கொள்ள முடியவில்லை.
undefined
ஆனால் இந்த கதை யூகிப்பின் அடிப்படையில் மட்டுமே உலா வருகிறது. எனவே வதந்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் மனதை தேற்றி கொண்டுள்ளனர் நயன் ரசிகர்கள்.
undefined
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் மட்டுமே நடந்து முடித்துள்ள நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
undefined
எனவே, தீபாவளிக்கு வெளியாக தயாராக இருந்த இந்த திரைப்படம், பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!