ED Summons Mahesh Babu in Real Estate Fraud Case : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் மகேஷ் பாபுவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு ED நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு.
23
Mahesh Babu
மோசடியில் ஈடுபட்டாரா Mahesh Babu?
சூர்யா டெவலப்பர்ஸிடமிருந்து மகேஷ் பாபு ரூ.5.9 கோடி பெற்றதாக தெரிகிறது. இதில் ரூ.3.5 கோடி ரொக்கமாகவும், ரூ.2.5 கோடி RTGS மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் குறித்து ED விசாரணை நடத்தி வருகிறது.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகேஷ் பாபு விளம்பரப்படுத்தினார். இதற்காக அவர் அதிக ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சுரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்கள் ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்கு `SSMB 29` என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாகக் கொண்டு அட்வெஞ்சர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.