கொரோனா வந்து சாகனும்... கர்ப்பிணி யானை வெடிமருந்து வைத்து கொன்ற கொடூரனுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்!

First Published Jun 4, 2020, 2:42 PM IST

கடந்த வாரம் கேரள மாநிலம்,  மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து கண்டுபிடிக்கப்பட்டது. வாயில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அனைவர் நெஞ்சங்களையும் சுக்கு நூறாய் நொறுக்கியது அந்த விஷயம்.

அந்த கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்தை வைத்து சாப்பிட கொடுத்துள்ளார். எந்த ஒரு பாவமும் அறியாத அந்த யானை, அந்த வஞ்சகனின் பாசத்தை நம்பி அன்னாசி பழத்தை வாங்கி கடித்த நொடி, வெடிமருந்து வெடித்து அந்த யானையின் நாக்கு , வாய் போன்றவை பலத்த காயம் ஏற்பட்டது.
undefined
வலியை வெளியில் சொல்ல முடியாமல் அந்த கிராமத்தையே இரண்டு நாட்களாக சுற்றி சுற்றி வந்துள்ளது அந்த யானை. வாயில் உள்ள காயம் பலமாக இருந்ததால், அதனால் உணவும் உண்ண முடியவில்லை. இந்நிலையில் வெள்ளியாற்று தண்ணீரில், நின்று தன்னுடைய காயத்தில் எரிச்சலை தனித்துள்ளது. எனினும் அந்த வெடிமருதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் குட்டி ஈன்ற தயாராக இருந்த அந்த கர்ப்பிணி யானை நின்ற இடத்திலேயே உயிரிழந்தது.
undefined
வெடி மருந்தால் காயமடைந்த யானையை பற்றி அறிந்து, யானையை காப்பற்ற இரண்டு கும்கி யானையோடு சென்ற, வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை இறந்த நிலையில் தான் அங்கு கண்டனர். மேலும் இந்த யானை வலியால் துடித்துக்கொண்டிருந்த போது கூட, ஒருவரை கூட தாக்கவில்லை என கூறுகிறார்கள்.
undefined
மனிதர்கள் தான் அரக்கர்கள் மிருகங்கள் அல்ல, இப்படி பட்டவர்கள் கொரோனாவந்து சாகவேண்டும் என கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
undefined
நடிகை அமலாபால் இதுகுறித்து கூறுகையில், உங்களுக்கான கர்மா காத்திருக்கிறது. இந்த தீய செயலுக்கு தகுதியான ஒரே தண்டனை அதே பட்டாசுகளை அவர்களின் பின் பக்கத்தில் கட்டிவிட்டு வெடிக்க வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
undefined
மேலும் நடிகை சிம்ரன் கூறுகையில்... "உண்மையில் இந்த செய்தியை படித்தவுடன் எனது இதயமே நொறுங்கி விட்டது. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், விலங்குகள் மீதான வன்முறை என்பது மிகவும் கொடுமையானது என்றும் கூறியுள்ளார்.
undefined
நடிகை ராஷி கண்ணா, இதயம் நொறுங்கி விட்டதாகவும், மனித நேயம் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
நடிகை ப்ரணிதா, மனித நேயம் எங்கே போனது என கேள்வி எழுப்பி, யானை வயிற்றில் குட்டி இருக்கும் கார்ட்டூன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
undefined
யானைக்கு நடந்துள்ள இந்த சம்பவம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது . இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!