Karthigai Deepam 2: கார்த்திகை தீபம் 2 சீரியலில், சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக... நவீனை சிவனாண்டி கொலை செய்ய துணியும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், நவீன் சிவனாண்டியின் சட்டையை பிடிக்க இதை பார்த்த சாமுண்டீஸ்வரி நவீனை தப்பாக புரிந்து கொண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
25
எச்சரித்த சாமுண்டீஸ்வரி:
அதாவது நவீன் சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் ஒருவித பதற்றத்துடன், அத்தை நான் எதுவும் பண்ணல என்று தன் பக்கத்தில் உள்ள நியாயத்தை சொல்ல வர, அதை காதில் கூட வாங்கிக்கொள்ளாத சாமுண்டீஸ்வரி, யாருக்கு யாருடா அத்தை? அவளே எனக்கு பொண்ணு இல்லனு சொல்லிட்டேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி உனக்கு அத்தை ஆவேன்? இன்னொரு முறை அத்தைனு சொன்ன அவ்வளவு தான் என்று எச்சரிக்கிறாள்.
35
சாமுண்டேஸ்வரிக்கு எதிராக சதி:
அதன் பிறகு கார்த்திக் இதெல்லாம் சிவனாண்டி வேலை தான், என்றும் நீ கொஞ்சம் உஷாரா இரு என சொல்லி எச்சரிக்கிறான். பிறகு சிவனாண்டியும் சந்திரகலாவும் சந்தித்து ரகசியமாக பேசிக் கொள்கின்றனர். சாமுண்டீஸ்வரியை ஏதேனும் சதி திட்டத்தில் சிக்க வைக்க பிளான் ஒன்றையும் போடுகிறார்கள்.
45
திட்டு வாங்கும் நவீன்:
இதைத்தொடர்ந்து, அடுத்த நாள் நவீனை சந்திக்கும் சிவனாண்டி சாமுண்டீஸ்வரி ஆபிஸ் வந்து உன்னை சந்திக்க சொன்னதாக சொல்ல, நவீன் ஒருவித சந்தேகத்துடனே கிளம்பி செல்கிறான். நவீனை பார்த்ததும் டென்சன் ஆகும் சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு இப்போ வந்த? இன்னொரு முறை என்னை பார்க்க வந்தால் உன்னை சுட்டு தள்ளிடுவேன் என வார்த்தையை விடுகிறாள்.
55
கொலைப்பழியில் சிக்குவாளா சாமுண்டீஸ்வரி:
நவீன் மீண்டும் குழப்பத்தோடு வெளியே வர, அவனை சுற்றி வளைக்கும் சிவனாண்டியின் ஆட்கள் அவனை அடித்து மயங்க வைக்கின்றனர். நவீனை புதைத்து அந்த கொலை பழியை சாமுண்டீஸ்வரி மீது போட முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.