Ilaiyaraaja : மேஸ்ட்ரோ மேஜிக்... சவாலான ராகங்களிலும் புகுந்து விளையாடி இளையராஜா கொடுத்த அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

Published : Jun 02, 2026, 11:42 AM IST

Ilaiyaraaja Complicated Tunes : இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் இசையமைத்த சவாலான ராகங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
16
Ilaiyaraaja Birthday

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக இசை ரசிகர்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் சாதனைகள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இளையராஜா, 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் அவர் படைத்த தாக்கம் இன்று வரை பேசப்படுகிறது.

26
இளையராஜாவின் மேஜிக்

கர்நாடக இசையின் பழமையான ராகங்களில் ஒன்றான ஸ்ரீ ராகத்தை திரைப்பட இசையில் பயன்படுத்திய அரிய முயற்சியாக, 16 வயதினிலே திரைப்படத்தின் “சோளம் வெதக்கையிலே” பாடல் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பாடலை இளையராஜாவே தனது குரலில் பாடியிருந்தார். அதேபோல், மழையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அமிர்தவர்ஷிணி ராகத்தில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்ட பின்னர் உண்மையிலேயே மழை பெய்ததாக கூறப்படும் சம்பவம், இசை உலகில் இன்றும் சுவாரஸ்யமான நினைவாக பேசப்படுகிறது.

36
சவாலான ராகங்களில் வந்த இளையராஜா பாடல்கள்

கர்நாடக இசை மேதை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கவிக்குயில் திரைப்படத்தின் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல், அரிதாக பயன்படுத்தப்படும் ரீதி கௌளை ராகத்தில் உருவாக்கப்பட்டு இசை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றது. தொழில்நுட்ப புதுமைகளிலும் இளையராஜா முன்னோடியாக திகழ்ந்தார். தமிழ் திரைப்பட இசையில் எலக்ட்ரிக் பியானோவை முக்கியமாக பயன்படுத்திய தொடக்க முயற்சிகளில் ஒன்றாக காயத்ரி படத்தின் “வாழ்வே மாயமா” பாடல் கருதப்படுகிறது.

46
ராஜா.. ராஜா தான்

இசைக் கட்டமைப்பில் அவரது புதுமையை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக சிட்டுக்குருவி திரைப்படத்தின் “என் கண்மணி என் காதலி” பாடல் விளங்குகிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்படும் ‘கவுண்டர் பாயிண்ட்’ (Counter Point) என்ற நுட்பத்தை திறமையாக கையாண்டு அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார். மலேசியா வாசுதேவனின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்தது. எளிமையான மெட்டிலும் ஆழமான இசை அமைப்பிலும் உருவான இந்தப் பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

56
திருப்புமுனை தந்த பாடல்

ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக இருக்கும் “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” பாடல் அந்தோலிகா ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இசை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ ஒலித் தொழில்நுட்பத்தில் வெளியான முன்னோடி படைப்பாக ப்ரியா திரைப்படப் பாடல்கள் அமைந்தன. இது இசைத் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கியது. உலகளாவிய அங்கீகாரம் பெற்ற தமிழ் திரைப்படப் பாடல்களில் “ராக்கம்மா கையைத் தட்டு” முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவிலும் பாராட்டுகளை பெற்ற இந்தப் பாடல், இளையராஜாவின் இசை திறனை உலக அரங்கில் எடுத்துச் சென்றது.

66
பிரம்மாண்ட இசை

தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை பயன்படுத்தி பிரம்மாண்டமான இசை அனுபவத்தை அவர் உருவாக்கியிருந்தார். அந்தப் பாடல் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. திரைப்பட இசையைத் தாண்டி, ஆன்மீக இலக்கியமான திருவாசகத்தை சிம்பொனி வடிவில் உலக இசை மேடையில் கொண்டு சென்ற சாதனையும் இளையராஜாவுக்கே சொந்தமானது. இந்திய இசையையும் மேற்கத்திய சிம்பொனி இசையையும் இணைத்த இந்த முயற்சி, அவரது இசை ஆளுமையின் உச்சத்தை வெளிப்படுத்தியது.

சர்ச்சைகள் எத்தனை வந்தாலும், இசையில் தொடர்ந்து புதிய பாதைகளை உருவாக்கி தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் இளையராஜா, இந்திய இசை வரலாற்றின் மறுக்க முடியாத சகாப்தமாக திகழ்கிறார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories