கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மின்னலே என்ற படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக உலகிற்கு காட்டியவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு - பார்ட் 1 என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.