ஏன் பவன் கல்யாண், அல்லு அர்ஜூனை வைத்து ராஜமௌலி படம் இயக்கவில்லை தெரியுமா?

Published : Nov 30, 2025, 12:00 PM IST

Rajamouli Never Direct With Allu Arjun and Pawan Kalyan : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தெலுங்கில் சிறிய, பெரிய ஹீரோக்களுடன் படம் செய்திருந்தாலும், பவன் கல்யாண் மற்றும் அல்லு அர்ஜூனை வைத்து ஏன் படம் இயக்கவில்லை என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
14
இயக்குநர் ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்தால் அந்த நடிகர்களின் ரேஞ்சே வேற லெவலுக்கு மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் ஏன் இந்த 2 நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்வி இப்போது எழுகிறது. அந்த 2 மாஸ் ஹீரோக்கள் வேறு யாருமில்லை அவர்கள் தான் பவன் கல்யாண் மற்றும் அல்லு அர்ஜூன்.

24
பவன் கல்யாணுக்காக ஒரு கதை

பவன் கல்யாணுக்காக ராஜமௌலி ஒரு கதையை தயார் செய்திருந்தார். ஆனால் பவன் அரசியலில் நுழைந்ததால், படத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் அந்த படம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதே போன்று தான் அல்லு அர்ஜூனுக்கும் ஒரு கதையை உருவாக்கி அதனை அவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் அல்லு அர்ஜூனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது.

34
அஜித்துடன் ஒரு மல்டிஸ்டாரர் படம்

பின்னர் அஜித்துடன் ஒரு மல்டிஸ்டாரர் படமும் கைவிடப்பட்டது. பவன் கல்யாண் அரசியலில் பிஸியாக இருப்பதால் ராஜமௌலியுடன் படம் செய்வது கடினம். ஆனால், அல்லு அர்ஜூன் பான் இந்தியா ஸ்டாராக இருப்பதால், எதிர்காலத்தில் இந்த காம்போ இணைய வாய்ப்புள்ளது. தற்போது ராஜமௌலி, மகேஷ் பாபுவுடன் வாரணாசி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

44
வாரணாசி

படத்தின் டைட்டில் சர்ச்சை காரணமாக வாரணாசி என்ற படமானது ராஜமௌலி வாரணாசி என்று மாற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. ரூ.1500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடிக்கிறார். வரும் 2027ல் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ராமனாக நடிக்கிறாராம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories