விஜய் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை அதில் ஒளிபரப்பாகும் சீரியல், நிகழ்ச்சிகள் என அனைத்திற்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதேபோல் அந்த நிகழ்ச்சியில் சாதாரணமாக பங்கேற்கும் கலைஞர்கள் பலரும் வெள்ளித்திரை வரை சென்று ஜொலிப்பது உண்டு.
undefined
அப்படி ஒரு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. தற்போது மற்றொருவரும் அந்த நிகழ்ச்சி மூலமாக திரையுலகில் பிரகாசித்து வருகிறார்.
undefined
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜாபர் சித்திக்கை நியாபகம் இருக்கிறது. வளர்ச்சி குறைபாடு கொண்ட ஜாபர் தனது அசத்தலான நடனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தன்னுடைய தனித்திறமையால் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்தார்.
undefined
அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியிலோ, படங்களிலோ ஜாபரை காணவில்லை. இதனால் அனைவரும் ஜாபரை மறந்தே விட்டார்கள். இந்த சமயத்தில் தான் ஜாபர் சித்திக்கிற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலமாக அடித்தது ஜாக்பாட்.
undefined
சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பாவக் கதைகள் சீரிஸ்ஸில் ஜாபர் நடித்த நரிக்குட்டி கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.இதனால் தற்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டிங்காகவே மாறிவிட்டார்.
undefined
“லவ் பண்ண உட்றனும்” என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய கதையில் வில்லனையே மிரட்டும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் நரிக்குட்டி. அதிலும் லெஸ்பியனுக்கு பதில் இவர் ‘ESPN’னா என்று கேட்கும் காட்சிகளில் இவரது நடிப்பு வேற லெவலுல்.
undefined
பலரும் நரிக்குட்டியின் போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இப்படி ஒரு நடிகரை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் என விக்னேஷ் சிவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது அது “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜாபர் சாதிக் என தெரியவந்ததை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
undefined