விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய சீரியல்களில் மிகவும் முக்கியமானது ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் காதலர்களாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதல் வசப்பட்டது.
undefined
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். தற்போது சின்னத்திரை ஜோடிகள் பலரும் பொறாமைப்படும் அளவிற்கு ஹாப்பியாக வாழ்த்து வருகின்றனர்.
undefined
சஞ்சீவ் - ஆல்யா தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.
undefined
கர்ப்பமாக இருந்த காரணத்தால் ஆல்யா மானசா சீரியல்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தினர். குழந்தை பிறந்த பிறகு பிற பெண்களுக்கு ஏற்படுவது போன்றே ஆல்யாவுக்கும் உடல் எடை கூடியது.
undefined
இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். திருமணம் சீரியல் புகழ் சித்து தான் இதன் ஹீரோ.
undefined
கொரோனாவால் இந்த சீரியல் ஷூட்டிங் தடைபட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆல்யா மானசா கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையில் 10 கிலோ வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது கணவர் மற்றும் உடற்பயிற்சியாளரின் உதவியால் தான் இது சாத்தியமானதும் என்றும் தெரிவித்துள்ளார்.
undefined
ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் சந்தியா என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக துடிக்கும் இளம் பெண்ணாக ஆல்யா மானசா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined