இயக்குநர் சுசீந்திரன் வீட்டில் நடந்த திடீர் சோகம்... கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்...!

First Published Jan 15, 2021, 12:34 PM IST

ஈஸ்வரன் பட வெற்றியைக் கொண்டாட படக்குழுவினர் தயாராகி வந்த நிலையில் சுசீந்திரன் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சோகம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
undefined
பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு, சாம்பியன், கென்னடி கிளப் போன்ற படங்கள் சுசீந்திரனின் படங்கள் தமிழ் சினிமாவில் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்து.
undefined
பொங்கல் விருந்தாக நேற்று சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு , பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு நல்லபடியாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
undefined
ஈஸ்வரன் பட வெற்றியைக் கொண்டாட படக்குழுவினர் தயாராகி வந்த நிலையில் சுசீந்திரன் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சோகம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
undefined
சுசீந்திரனின் அம்மா ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். அங்கு அவர் இன்று காலை 11 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62.
undefined
பிரபல இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவருடைய தந்தை நல்லுசாமி பெயரில் நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவருடைய தம்பி சரவணன் ஆகியோருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
undefined
click me!