சித்ரா தற்கொலை வழக்கு: நண்பர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்..!

First Published Dec 18, 2020, 6:58 PM IST

சித்ரா தற்கொலை வழக்கு சம்மந்தமாக இன்று ஹேம்நாத்திடம், சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், சித்ராவின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து நசரத் பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
undefined
சித்ராவுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அவரை ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
undefined
கடந்த 14ம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் சித்ராவின் தாய், தந்தை, அக்கா உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் தாயார் விஜயா, தன் மகள் சாவுக்கு ஹேமந்த் தான் காரணம் என குற்றச்சாட்டினார்.
undefined
இந்நிலையில் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 14ம் தேதி இரவு ஹேமந்த் கைது செய்யப்பட்டார். தற்போது பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த், ஆர்.டி.ஓ. விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
undefined
ஹேமந்தை விசாரணைக்கு ஆஜர்படுத்தும் படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
undefined
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு விசாரணைக்காக ஆஜரான ஹேமந்திடம் சுமார் 8 மணி நேரம் நேற்று ஆர்.டி.ஓ. தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
undefined
இதை தொடர்ந்து இன்றும் ஹேமந்திடம் நடைபெற்று வந்த விசாரணை சுமார் 9 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்தது. பின் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
undefined
இதுவரை, சித்ராவின் தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் ஹேம்நாத்தின் உறவினர்கள் மற்றும் சித்ரா நடித்து வந்த சீரியல் இயக்குனர்கள் மத்தியில் மட்டுமே விசாரணை நடந்து வந்த நிலையில், அடுத்த கட்டமாக சித்ராவை பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் வட்டாரத்தில் விசாரணை நடத்த படும் என்று கூறப்படுகிறது.
undefined
click me!