#Breaking 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தரமுடியாது..! நீதிமன்றம் அதிரடி..!

First Published Jan 8, 2021, 2:11 PM IST

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் சமீபத்தில் தான்  50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல்திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
 

ஆனால் தொடரும் கொரோனா தொற்று பீதி காரணமாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் வருகை கணிசமாக குறைந்தே காணப்பட்டது. தற்போது தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
undefined
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கும் படி நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார். பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
undefined
இதனை திரையுலகினர் பலரும் வரவேற்ற போதும், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
undefined
இதனிடையே நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரபு என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் இன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
undefined
இதனை தற்போது விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
undefined
மேலும் தற்போது உள்ள 50 சதவீத, இருக்கை என்ற நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும் என தமிழக அரசுக்கு கேள்வியையும் எழுப்பியுள்ளது நீதிமன்றம்.
undefined
கொரோனா தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறித்தியுள்ள நீதிபதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த இந்த பொங்கலுக்கு 50 சதவீத இறக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
undefined
click me!