தொப்புளில் தோடு மாட்டி விளையாண்டது எல்லாம் வேஸ்டா போச்சே... அதிரடி முடிவெடுத்த யாஷிகா ஆனந்த்....!

First Published Jun 20, 2020, 8:26 PM IST


யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் கிடைத்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டால் வாய்ப்பு குவியும் என்ற யாஷிகாவின் கனவும் பொய்யானது. இதனால் யாஷிகா ஆனந்த் எடுத்துள்ள அதிரடி முடிவு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 

முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
undefined
இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
undefined
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர்கிடைக்கவில்லை.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
undefined
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
undefined
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார்.குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.
undefined
இந்நிலையில், கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே படப்பிடிப்பு இல்லாத இந்த நாட்களை பயன்படுத்தி கொண்டு, ஹெவி ஒர்க் அவுட் செய்து செம்ம பிட்டாக மாறியுள்ளார்.
undefined
இந்த அதிரடி மாற்றத்தை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக, தன்னுடைய தொப்புளுக்கு கம்மல் போட்டு அலங்கரித்து ஹாட் போட்டோ ஒன்றை தட்டிவிட்டார். அந்த போட்டோவும் சோசியல் மீடியாவில் சகட்டுமேனிக்கு வைரலானது.
undefined
அதுவும் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகாததால் யாஷிகா ஆனந்த் தனது ரூட்டை அதிரடியாக மாற்றிவிட்டார். அதாவது இதுவரை படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
ரோஜா சீரியலில் நடிக்க ஒரு எபிசோடுக்கு ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சீரியலில் நடிப்பது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் இன்னும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
undefined
click me!