பிக்பாஸ் வனிதாவை கண்கலங்க வைத்த மகள்... அம்மாவின் 3வது கல்யாணம் குறித்து அதிரடி கருத்து...!

First Published Jun 19, 2020, 6:51 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் வனிதா விஜயகுமார். நடிகையாக வலம் வந்த காலத்தை விட தற்போது தான் மிகவும் பிரபலமாக உள்ளார். விவாகரத்திற்கு பிறகு 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதா தற்போது 3வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளார். அம்மாவின் 3வது திருமணம் குறித்து மகள் ஜோவிகாவின் கருத்தால் வனிதா கண்கலங்கியுள்ளார். அப்படி என்ன சொன்னார் பார்க்கலாம் வாங்க.. 

தளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டுவெளியான,சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த வனிதா, பின் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு முழுமையாக விலகினார்.
undefined
பிரபல தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில வருடங்களிலேயே கணவரை விட்டு பிரிந்தார். இதை தொடர்ந்து ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஒரு மகள் பிறந்த பின் அவரை விட்டும் பிரிந்தார்.
undefined
இந்நிலையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கிய இவர், கடந்த வருடம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
undefined
இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் ஒரே மைனஸ் என்றால், தேவை இல்லாத விஷயத்திற்கு அதிக அளவில் குரலை உயர்த்துவதும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து, சிறு பிரச்னையை கூட தெரிதாக்கி விடுவதும் தான் இருந்தால் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்த வனிதா, மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடினார். இந்த லாக்டவுன் நேரத்தில் யூ டியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
undefined
தற்போது வனிதா 3வது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். அதை உறுதி செய்துள்ள வனிதா, தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.வனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார்.
undefined
இந்நிலையில் தனது அம்மாவின் திருமணம் குறித்து வனிதாவின் மகள் தெரிவித்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்கே தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.
undefined
உங்களுடன் இருக்கும் இந்த 15 வருடங்கள் மிகவும் சிறப்பானது.உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த படி வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தகுதியானவர். நான் இதை மகளாகவும் தோழியாகவும் கூறுகிறேன் வாழ்த்துக்கள் மா என்று பதிவிட்டுள்ளார்.
undefined
அதற்கு பதிலளித்துள்ள வனிதா, ஜோவிகா, நீ என்னை அழ வைத்து விட்டாய். அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றிலும் எனக்கு துணை நின்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீயும் ஜெயாவும் என்னுடன் இருப்பது போதும். மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை. நீ என்னுடைய பாகுபலி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
undefined
click me!