சுஷாந்த் தற்கொலைக்கு முதல் நாள் நடந்த பகீர் சம்பவம்... காதலி ரியா மீது அடுத்தடுத்து திரும்பும் சந்தேகம்...!

First Published Aug 4, 2020, 8:20 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் அனைத்தும் அவருடைய காதலியான ரியா சக்ரபர்த்திக்கு எதிராக அமைந்துள்ளன. 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார்.
undefined
இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
undefined
மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார்.
undefined
மேலும் சுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் கொடுத்த பகீர் வாக்குமூலமும், ரியாவுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
undefined
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை வழக்கை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து ரியா சக்ரபர்த்தி மீது பகீர் குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.
undefined
சுஷாந்தின் முன்னாள் மேனேஜரான திஷா ஜூன் 8ம் தேதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு சுஷாந்த் தான் காரணம் எனக்கூறப்பட்டது.
undefined
இதனால் மிகுந்த கவலை கொண்டார் சுஷாந்த். திஷாவை தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன் என்று என்னிடம் கூறி அழுதார். அப்போதுதான் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
undefined
ரியாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத சுஷாந்த் அன்று முழுவதும் கதறி அழுதார் என அவருடைய நண்பர் சித்தார்த் பிதானி தெரிவித்துள்ளார்.
undefined
தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்த அவர், பின்னர் அப்படியே மயங்கி விட்டார். ரியா பிரிந்து சென்றதால் மனதளவிலும் உடலளவிலும் நொறுங்கி விட்டார். மறுநாள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் தங்கியிருந்த சித்தார்த்தும் தெரிவித்துள்ளார்.
undefined
click me!