Published : Apr 27, 2025, 07:35 AM ISTUpdated : Apr 27, 2025, 08:39 AM IST
மலையாளத்தில் அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆலப்புழா ஜிம்கானா படத்தின் இயக்குனரான காலித் ரஹ்மான் உள்பட இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Alappuzha Gymkhana Director Khalid rahman Arrested : கொச்சியில் ஹைப்ரிட் கஞ்சாவுடன் இரண்டு பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்குநர்களான காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா மற்றும் அவர்களுடன் இருந்த ஷாலிஃப் முகமது ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள். எக்ஸைஸ் சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர். 1.6 கிராம் ஹைப்ரிட் கஞ்சாவுடன் இவர்கள் கொச்சி கோஷ்ரீ பாலம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
24
khalid rahman asharaf hamza arrested with hybrid ganja
மலையாள இயக்குனர் காலித் ரஹ்மான் கைது
மூவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். கஞ்சா பயன்படுத்த முயன்றபோது மூவரும் பிடிபட்டதாக எக்ஸைஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். 'தமாஷா', 'பீமனின் வழி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஷ்ரஃப் ஹம்சா. வெற்றிப்படமான 'தள்ளுமால' படத்தின் இணை எழுத்தாளரும் இவர்தான்.
'உண்டா', 'தள்ளுமால', 'அனுராக கரிக்கின் வெள்ளம்', 'லவ்' உள்ளிட்ட படங்களையும் காலித் ரஹ்மான் இயக்கியுள்ளார். 'தள்ளுமால' உள்ளிட்ட காலித் ரஹ்மானின் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் காலித் ரஹ்மான் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான எக்ஸைஸ் நடவடிக்கை பிரபலங்களுக்கும் நீண்டுள்ளது என்பதே இந்தக் கைதுகளின் முக்கியத்துவம். வணிக ரீதியான அளவில் கஞ்சா கைப்பற்றப்படாததால் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
44
Shine Tom Chacko
மலையாள திரையுலகில் அதிகரிக்கும் போதை பழக்கம்
அண்மையில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மலையாள திரையுலகின் இரண்டு முக்கிய இயக்குனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் இருப்பதே இந்த அதிரடி சோதனைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.