இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக சென்றுவிடவில்லை. அதிலும் உருமாறிய கொரோனா மீண்டும் உலக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதால், பிரபலங்கள் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
undefined
அந்த வகையில், சமீபத்தில் நடிகை தமன்னா, 'அண்ணாத்த' படப்பிடிப்பை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்க பட்டு பின்னர் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட தகவல் அனைவரும் அறிந்தது தான்.
undefined
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும், நடிகை ராய் லட்சுமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
undefined
இவருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், எனவே தன்னை தனிமை படுத்தி கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
undefined
கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராய் லட்சுமி தற்போது நன்றாக உள்ளதாகவும், விரைவில் இதில் இருந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined