“அந்த மாதிரி சந்தோஷம் கொடுப்பவள் நானில்லை”... ஆபாசமாக பேசிய நபரை போட்டோவுடன் அம்பலப்படுத்திய நடிகை...!

First Published Jun 10, 2020, 5:58 PM IST

முகநூலில் பதிவிட்ட தனது புகைப்படத்திற்கு தரங்கெட்ட முறையில் ஆபாசமான முறையில் கமெண்ட் செய்த நபரை மலையாள இளம் நடிகை ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார். 

ரன் பேபி ரன், கல்கி, மல்லு சிங், ஹோட்டல் கலிபோர்னியா போன்ற மலையாள படங்களில் நடித்தவர் அபர்ணா நாயர். எதுவும் நடக்கும்என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அபர்ணா, சோசியல்மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.
undefined
மேனேஜர் வைத்து நடிகைகள் பட வாய்ப்பு தேடிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக நடிகைகள் தற்போது தங்களது போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
undefined
அப்படி சமீபத்தில் அபர்ணா தனது முகநூல் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர் அபர்ணா நாயரை ஆபாசமாகவும், மோசமாகவும் சித்தரித்து பதிவிட்டிருந்தார்.
undefined
இதனால் கடுப்பான அபர்ணா நாயர் அந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பகிர்ந்த அபர்ணா நாயர், சகட்டுமேனிக்கு கடுமையாக விமர்சித்துள்ளார்.
undefined
நான் இந்த பக்கத்தை எனது நலம் விரும்பிகளுடன் உரையாடுவதற்காக பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் வக்கிரங்களை தீர்த்துக்கொள்ளும் இடமல்ல.
undefined
உங்களுடைய வக்கிர ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.இதுபோல் ஆபாசமான அருவறுக்கத்தக்க கருத்துக்களை சகித்து கொள்ளும் ஆள் நானில்லை.
undefined
இப்படி பதிவிடுவதற்கு முன்பு உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 விநாடி சந்தோஷம் கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை என்று கோபமாக திட்டி தீர்த்துள்ளார்.
undefined
click me!