பத்திரமா இருங்கனு சொன்ன மகன் இன்று இல்லை! உச்ச கட்ட சோகத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்த தந்தை! புகைப்படங்கள்

First Published Jun 15, 2020, 3:54 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் திரையுலகமே இதனால் சோகத்தில் மூழ்கியுள்ளது.
 

சுஷாந்த்சிங் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் போலீசார் முதல் கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
undefined
மகனின் மரணம் குறித்த செய்தி கேட்டதும் அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஆடிப்போய்விட்டார்கள்.
undefined
குறிப்பாக ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் சுஷாந்த்சிங் தந்தை கிருஷ்ணகுமார், மகனின் மரணச் செய்தி கேட்டு நிலைகுலைந்து போனார்.
undefined
ஊரடங்கிற்கு முன் சுஷாந்த்சிங் தனது சொந்த ஊரான பாட்னாவுக்கு வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அப்போது அவருக்கு எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் இருந்தது என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
undefined
தன்னுடைய அப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சுஷாந்த் கடைசியாக, மூன்று நாட்களுக்கு முன் தந்தைக்கு போன் செய்து, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கூறியது மட்டும் இன்றி, பத்திரமாக இருக்கவும் கூறியுள்ளார்.
undefined
தன்னுடைய வீட்டில் பணிபுரியும் பெண்ணிடமும், தந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார் சுஷாந்த்.
undefined
மகன் உயிரோடு இல்லை என்கிற உச்ச கட்ட சோகத்தை தாங்கி கொண்டு அவருடைய தந்தை சற்று நேரத்திற்கு முன், மும்பை ஏர்போர்ட் வந்தடைந்தார்.
undefined
உறவினர் ஒருவர் கையை பிடித்து கொண்டு, தன்னுடைய சோகத்தை வெளிக்காட்ட முடியாமல் நடந்து வருகிறார் சுஷாந்த் தந்தை.
undefined
click me!