'கோவில் அடிமை நிறுத்து' சத்குருவை பேட்டி எடுத்த நடிகர் சந்தானம்!

First Published Mar 13, 2021, 2:59 PM IST

நடிகர் சந்தானம் சமீபத்தில், 'ஈஷா'  சத்குரு , தமிழக கோவில்கள் காக்கப்படவேண்டும் என்று பதிவிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரை பேட்டி எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

கடந்த மாதம், ஈஷாசத்குரு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்... 1,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. என கூறியிருந்தார்.
undefined
இதனை ரீ-ட்விட் செய்த, நடிகர் சந்தானம்... சத்குருவின் கருத்திற்கு முழுமையாக உடன்படுவதாகவும் பக்கதர்களிடம் விட்டு விடுங்கள் . ஒரு பூஜை கூட நடக்காமல் பல வழிபாட்டுத் தளங்கள் இருப்பதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கு மிகக் குறைவாகவே செய்யப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.
undefined
இதை தொடர்ந்து, தற்போது #கோவில்அடிமைநிறுத்தம் என்கிற கருத்தை முன்வைத்து, நடிகர் சந்தானம் சத்குருவை பேட்டி எடுத்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் உயிர் நாடியான கோவில்களை காப்போம், என வலியுறுத்தியும்... வகையில் இந்த பேட்டியை எடுத்துள்ளார் சந்தானம். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
காமெடி நடிகர் என்பதையும் தாண்டி, கடந்த சில வருடங்களாக ஹீரோ கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் சந்தானம்.
undefined
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு 2 ' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பாரிஸ் ஜெயராஜ்', மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
அதே நேரத்தில் தொகுப்பாளராக மாறி, சந்தானம் சத்குரு அவர்களை எடுத்துள்ள இந்த பேட்டியின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
undefined
click me!