பெரிய குடும்பத்து டாப் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி... சிகிச்சை பெறும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

First Published Apr 16, 2021, 5:44 PM IST

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் பவன் கல்யாணின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஜன சேனா என்ற பெயரில் கட்சியையும் நடத்தி வருகிறார்.
undefined
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பிங்க்'. இந்த படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் நடித்தார். 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பட்டையைக் கிளப்பியது. டாப்ஸி வேடத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். பெண்ணுரிமை குறித்து பேசி இருந்த இந்த படம், இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
undefined
பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் வசூல் ரீதியாக தாறுமாறு சாதனை படைத்து வருகிறது. முதல் நாளே இந்திய அளவில் ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
undefined
வக்கீல் சாப் பட வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பவன் ஸ்டார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜன சேனா கட்சியினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
undefined
ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பாதுகாவலர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவர்களின் அறிவுரையின் படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜன சேனாவில் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்களுக்கு ஒரு வார இடைவெளியிலேயே அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
undefined
எனவே அமைதியான சூழ்நிலையில் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஓய்வில் இருந்து வந்த பவன் கல்யாண் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தற்போது தனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதை அடுத்து பவன் கல்யாண் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
undefined
இதனிடையே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் பவன் கல்யாணின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகிலேயே மிகப்பெரிய கலைக்குடும்பமான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவர் ஸ்டார் குடும்பத்தை கொரோனா தொற்று ஆட்டிப்படைப்பது இது 3வது முறையாகும். ஏற்கனவே சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், சிரஞ்சீவியின் மூத்த சகோதரர் நாகேந்திர பாபுவின் மகனான வருண் தேஜ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!