அதில் அவர் கூறியிருப்பதாவது, சரியான நபரை சந்திப்பது என்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக மாற வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் அதே நபருடன் ஒவ்வொரு நாளும், மீண்டும் மீண்டும் காதலில் விழுவது என்பது என்னையும் மீறி நடந்த செயல். அவர் அவராகவே இருப்பதால்தான் அது சாத்தியமானது. என் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு நல்ல கணவராக, அப்பாவுக்கு, சில நேரங்களில் எனது அம்மாவாகவும் இருப்பவருக்கு, மிக முக்கியமாக என் வாழ்நாள் நண்பனுக்கு, எனது சிங்கத்துக்கு இந்த நாளில் ஒரு குட்டிப் பரிசு' என பதிவிட்டுள்ளார்.