மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வு (Personality Test) அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2026 ஜனவரி 22 அன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை (Full Dress Rehearsal) காரணமாக, அன்றைய தினம் பிற்பகல் நடைபெறவிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 22 மதியம் நேர்காணல் இருந்த தேர்வர்களுக்கு, தற்போது பிப்ரவரி 27, 2026 அன்று காலை அமர்வில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தேர்வர்கள் இந்த மாற்றத்தைக் கவனித்து தங்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.