ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும்போது தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளையும் TRB வெளியிட்டுள்ளது:
• நிலையான பாடப்புத்தகங்கள் (Standard Text Books): விடைக் குறிப்புகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும்போது, அதற்கு ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையான பாடப்புத்தகங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
• ஏற்கப்படாதவை: கையேடுகள் (Guides) அல்லது குறிப்புகள் (Notes) போன்றவற்றை ஆதாரமாக சமர்ப்பித்தால் அவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
• நிராகரிப்பு: உரிய சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோல, தபால் மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ அனுப்பப்படும் முறையீடுகளும் ஏற்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.