Job Vacancy: ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.! வெளிநாட்டில் அரசு வேலை காத்திருக்கு.! ரூ.1.25 லட்சம் சம்பளம்!

Published : Dec 20, 2025, 06:41 AM IST

தமிழ்நாடு அரசு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு கலைகளை கற்றுத்தர கலையாசிரியர்களை நியமிக்க உள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு மாதம் ரூ.1.25 லட்சம் வரை சம்பளம் மற்றும் விமானச் செலவு, விசா, தங்குமிடம் போன்ற வசதிகள் வழங்கப்படும். 

PREV
13
கைநிறைய சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை

தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பும் கலையாசிரியர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மாதம் ரூ.1.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

23
வெளிநாட்டில் ஆசிரியர் வேலை – பெரிய வாய்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அயலகத் தமிழர் தினம் 2025 அறிவிப்பைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலைகளை கற்றுத் தரும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் கலை பண்பாட்டுத் துறை மூலம் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மியான்மர், இந்தோனேசியா, கம்போடியா, மாலத்தீவு, மொரிஷியஸ், ரீயூனியன், சீஷெல்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி, உகாண்டா போன்ற நாடுகளில் செயல்படும் தமிழ்சங்கங்களில் பரதநாட்டிய ஆசிரியர்கள் மற்றும் கிராமிய நடன ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 

சம்பளம் மற்றும் வசதிகள்

தேர்வு செய்யப்படும் கலையாசிரியர்கள் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

  • மாத சம்பளம்: ரூ.1,25,000
  • வெளிநாடு சென்று திரும்புவதற்கான விமானச் செலவு

விசா செலவு

தங்குமிடம் செலவுகள் இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் வழங்கப்படும்.

33
தகுதி மற்றும் விண்ணப்ப முறை

25 வயது நிரம்பியவர்களாகவும், ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்தவர்களாகவும், பரதநாட்டியம் அல்லது கிராமிய நடனங்களில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடத்தும் திறன் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை கலை பண்பாட்டுத்துறை இணையதளமான artandculture.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து 31.12.2025 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories